Sunday, October 11, 2009

தாயே !!!!



என்ன பிழை செய்தோம் ,?

பணம் என்ற காகிதத்தால் தினம் ,

மனம் நொந்து வாழ்கிறோம் !

கடன் இன்னும் இருப்பதால் ஏனோ,

மீண்டும் பணம் தேட நினைக்கிறோம் .

நம்மை அறியாமல்

வழிந்தோடும் கண்ணீர் துளிகளை

துடைத்ததுக் கொள்கிறோம்., ஆனால் ,

அறிந்தே உருவாகும் ஆசைகளை மட்டும்

ஏனோ துடைக்க மறக்கிறோம் .?

வாழ்வதாய் எண்ணி

வாழ்க்கையின் முகவரியை

தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் ,

பணத்தின் முகவரி

கிடைத்ததுவிட்டதாக எண்ணி .,

நாம் இழந்த வஸந்தம்தான் கிடைத்திடுமோ ?

பணத்தால் அடைந்த காயம்தான் ஆரிடுமோ ! ???????????


No comments:

Post a Comment