Movie: Kadhalar Dhinam
Song: Enna Vilai Azhagae
Lyrics: Vaali
Artist: Srinivas,M G Srikumar and group
Music:A R Rahman
நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ
என் தோள்களே தட்டம் என்று என்னாளுமே தொத்திக்கொள்ளும்
காற்றல்லவா நீ என் கண்ணே
கல்யாண நாளில் மாலை கொள்ள கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல
அந்த வனம் நந்தவனம் ஆகும்
மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
உன் கணவன் நாளைதான் வரவேண்டும்
உயிர்க் காதல் நெஞ்சையே தரவேண்டும்
மணப்பந்தல் தோரணம் நான் போட
மணவாளனோடு உன் கைகூட
உன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட
ஹை ஹைஹைஹைஹை ஹைஹைஹை ஹைஹைஹைஹை ஹைஹைஹை
ஹைஹைஹைஹைஹைஹைஹை ஹை ஹை ஹை
ஹைஹைஹைஹை ஹைஹைஹை ஹைஹஹஹைஹை ஹைஹைஹை
ஹைஹைஹைஹைஹைஹைஹை ஹை ஹை ஹை
காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை
காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை
வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக
வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக
என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம் உனை எண்ணி வாழ்வதே என்னின்பம் (2)
இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்
நீ வாழ்க...நலமாக...நீ வாழ்க...நலமாக...
நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ
அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி
அன்னமிவள் மேடை வந்தாள் மின்னல் முகம் காட்டி
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணைத் தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை (2)
இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ என்றும் பூக்கள் தூவும்
நீ வாழ்க...நலமாக...
நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ
நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாளோ
மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
மருதாணிக் கோலம் போட்டு மணிக் கையில் வளையல் பூட்டு
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு
ரோஜா...ரோஜா... !!!
Movie: Kadhalar Dhinam
Song: Roja Roja
Lyrics: Vaali
Artist: Unnikrishnan
Music:A R Rahman
ரோஜா...ரோஜா...
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் - அந்தத்
திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்
ரோஜா...ரோஜா...ரோஜா...ரோஜா...
நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து எனை உடுத்து
நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா
உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகயில் எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கயில் எனக்கு வேர்வை வரும்
உடல்கள்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்று
ரோஜா...ரோஜா...ரோஜா...
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன
என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாடென கையோடு சொல்லாது புல்லங்குழல்
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு நினைவுகள் ஏது
ரோஜா...ரோஜா...ரோஜா...
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா (2)
ரோஜா...ரோஜா...
No comments:
Post a Comment