Sunday, October 11, 2009

திரைப்படப் பாடல் வரிகள்.

ராம் ( விடிகின்ற பொழுது தெரிந்திடுமா ) !!!

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையைக் கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
(விடிகின்ற பொழுது தெரிந்திடுமா)
உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீதீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சே
மெல்ல மெல்ல என்னைக் கொல்லத் துணிஞ்சிடுச்சே
தீயில் என்னை நிற்கவைச்சு சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே
காட்டுத்தீ போல கண்மூடித்தனமாய்
என்சோகம் சுடர்விட்டு எரியுதடா
மனசுக்குள் சுமந்த ஆசைகளெல்லாம்
வாய்பொத்தி வாய்பொத்தி நகருதடா
யாரிடம் உந்தன் கதைபேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மெளனத்தில் கரையும்
பச்சைநிலம் பாலைவனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூடக் கண்கள் மூடிக் கொண்டதடா
உன்னை விடக் கல்லறையே பக்கமடா
(விடிகின்ற பொழுது தெரிந்திடுமா)

ராம் ( நிழலினை நிஜமும் பிரிந்திடுமா ) !!!

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவறை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒருமுறை சுமப்பாயம்மா...
லாஹில்லா லாஹி லல்லல்லாலல்லா லாஹில்லா லாஹி லல்லல்லால்லா (லாஹில்லா..)
(நிழலினை நிஜமும் பிரிந்திடுமா)
நடமாடும் சவமாய் நானிங்கே இருக்க
விதிசெய்த சதியா தெரியலம்மா
கடல்துப்பும் அலையும் கடலில்தான் சேரும்
அதுபோல என்னையும் சேர்த்துக்கம்மா
உன்பிள்ளை என்று ஊர்சொல்லும் போது
எனக்கே நான் யாரோ என்றாகிப் போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா
மொத்த பூமி எனக்கேதான் சொந்தமம்மா
பத்துமாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்குநான் வந்ததென்ன குத்தமம்மா ...
லாஹில்லா லாஹி லல்லல்லாலல்லா லாஹில்லா லாஹி லல்லல்லால்லா
லாஹில்லா லாஹி லலல்லலா லாஹில்லா லாஹி ஏ ஏ லாஹி
திசையெல்லாம் எனக்கு இருளாகிக் கிடக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகிப்போச்சு
சரிசெய்ய வழியும் தெரியலம்மா
சூரியன் உடைஞ்சா பகலில்ல அம்மா
ஆகாயம் மறைஞ்சா அகிலமே சும்மா
என்னைச் சுத்தி என்னென்னமோ நடக்குதம்மா
கண்டதெல்லாம் கனவாகிப் போயிடுமா
தூக்கத்திலே உன்னநானும் தொலைச்சேனம்மா...
தேடித்தர தெய்வம் வந்து உதவிடுமா

பள்ளிக்கூடம் ( இந்த நிமிடம் ) !!!

ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
(இந்த நிமிடம்)
இந்த மெளனம் இந்த மெளனம் இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம் இப்படியே நீளாதா
பெ: இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே நீளாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
ஆ: ஞாபகப் பறவை ஓடுகள் உடைந்து
வெளியே தாவிப் பறக்கிறதே
நீயும் நானும் ஒன்றாய்த் திரிந்த‌
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
பெ: ஆயிரம் சொந்தம் உலகில் இருந்தும்
தனிமை என்னைத் துரத்தியதே
உன்னைக் காணும் நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையாய்க் கிடக்கிறதே
ஆ: இதயம் நொறுங்குகிறேன் இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே இறப்பேனே கண்ணே
பெ: ஓ ஆயிரம் காலம் வாழ்கிற‌ வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ
ஆ: இந்த நிமிடம் இந்த நிமிடம்...
ஆ: கிழ‌க்கும் மேற்கும் வ‌ட‌க்கும் தெற்கும்
ம‌னித‌ன் வ‌குத்த‌ திசையாகும்
உன்முக‌ம் இருக்கும் திசையே எந்த‌ன்
க‌ண்க‌ள் பார்க்கும் திசையாகும்
பெ: கோடையும் வாடையும் இலையுதிர் கால‌மும்
இய‌ற்கை வ‌குத்த‌ நெறியாகும்
உன்னுட‌ம் இருக்கும் கால‌த்தில் தானே
எந்த‌ன் நாட்க‌ள் உருவாகும்
ஆ: உந்த‌ன் நிழ‌ல‌ருகே ஓய்வுக‌ள் எடுத்திடுவேன்
இது காத‌ல் இல்லை இது காம‌ம் இல்லை
பெ: ஓ தேக‌த்தைத் தாண்டிய‌ மோக‌த்தைத் தாண்டிய‌
உற‌வும் இதுதானோ
பெ: இந்த‌ நிமிட‌ம் இந்த‌ நிமிட‌ம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
ஆ: இந்த‌ மெள‌ன‌ம் இந்த‌ மெள‌ன‌ம் இப்ப‌டியே உடையாதா
இந்த‌ ம‌ய‌க்க‌ம் இந்த‌ ம‌ய‌க்க‌ம் இப்ப‌டியே நீளாதா

தமிழ் எம்.ஏ ( பறவையே எங்கு இருக்கிறாய் ) !!!

பறவையே எங்கு இருக்கிறாய்


பறக்கவே என்னை அழைக்கிறாய்


தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே (பறவையே)
அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே


அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே


பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே


மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ


கண்கள் கைகள் சொல்வதுண்டோ


நீ போட்டாய் கடிதத்தின் வரிகள் கடலாக


அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக


(பறவையே எங்கு இருக்கிறாய்)


உன்னோடு நானும் போகின்ற பாதை


இது நீளாதோ தொடு வானம் போலவே


கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்


உரையாடல் தீர்ந்தாலும் உன் மெளனங்கள் போதும்


இந்தப் புல் பூண்டும் பறவையின் நாமம் போதாதா


இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா


முதல்முறை வாழப் பிடிக்குதே


முதல்முறை வெளிச்சம் பிறக்குதே


முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே


முதல்முறை கதவு திறக்குதே


முதல்முறை காற்று வருகுதே


முதல்முறை கனவு பலிக்குதே அன்பே


ஏழை காதல் மலைகள் தனில்


தோன்றுகின்ற ஒரு நதியாகும்


மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி


உடையாமல் உருண்டோடும் நதியாகிடுதோ
இதோ இதோ இந்தப் பயணத்திலே


இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்


பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்


இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா


என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா


முதல்முறை வாழப் பிடிக்குதே


முதல்முறை வெளிச்சம் பிறக்குதே


முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே


முதல்முறை காற்று வருகுதே


முதல்முறை கனவு பலிக்குதே அன்பே


க‌ருப்ப‌சாமி குத்த‌கைதார‌ர் ( உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ) !!!

பெ: உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து


க‌ண்ணு ரெண்டும் க‌ண்ணீருக்கு வாக்க‌ப்ப‌ட்ட‌து


ஒத்த‌ச் சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து


த‌ப்பிச் சொல்ல‌க் கூடாதுன்னு கேட்டுக்கிட்ட‌து


தேதித் தாளைப் போலே வீணே நாளும் கிழிய‌றேன்


நான் தேர்வுத் தாளை க‌ண்ணீரால‌ ஏனோ எழுதுறேன்


இது க‌ன‌வா ஆஆஆஆ... இல்லை நிஜ‌மா


த‌ற்செய‌லா தாய் செய‌லா..


நானும் இங்கு நானும் இல்லையே (உப்புக்க‌ல்லு)



பெ: ஏதும் இல்லை வண்ண‌ம் என்று நானும் வாடினேன்


நீ ஏழு வ‌ண்ண‌ வான‌வில்லாய் என்னை மாத்துன‌


தாயும் இல்லை என்று உள்ள‌ம் நேற்று ஏங்கினேன்


நீ தேடி வ‌ந்து நெய்த‌ அன்பால நின்று தாக்கினாய்


க‌த்தி இன்றி ர‌த்த‌ம் இன்றிக் காய்ப்ப‌ட்ட‌வ‌ள்


உன் க‌ண்க‌ள் செய்த‌ வைத்திய‌த்தால் ந‌ன்மைய‌டைகிறேன்


மிச்சம் இன்றி மீதம் இன்றி சேத‌ப்ப‌ட்ட‌வ‌ள்


உன் நிழ‌ல் கொடுத்த‌ தைரிய‌த்தால் உண்மைய‌றிகிறேன்


உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து


ஒத்த‌ச்சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து


ஓ ஓ ஓ ஓஒ

பெ: மீசை வைத்த‌ அன்னை போல‌ உன்னைக் காண்கிறேன்


நீ பேசுகின்ற‌ வார்த்தை எல்லாம் வேத‌மாகுதே


பாழ‌டைந்த‌ வீடு போல‌ அன்று தோன்றினேன்


உன் பார்வை ப‌ட்ட‌ கார‌ண‌த்தால் கோல‌ம் மாறுதே


க‌ட்டிலுண்டு மெத்தை உண்டு ஆன‌ போதிலும்


உன் பாச‌ம் க‌ண்டு தூங்க‌வில்லை என‌து விழிகளே


தென்ற‌லுண்டு திங்க‌ளுண்டு ஆன‌ போதிலும்


க‌ண் நாளும் இங்கு தீண்ட‌வில்லை உன‌து நினைவிலே


(உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து)






பொறி ( பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் ) !!!

ஆ: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
ஆ: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
பெ: ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
ஆ: பயணத்தில் வருகிற சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்
பெ: பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை
ஆ: புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே
பெ: தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
ஆ: தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
பெ: தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் நிஜம்கிறுக்கல்
ஆ: செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவன் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
பெ: எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே
ஆ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பெ: பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்

வாரணம் ஆயிரம் (Hai Malini .. I am Krishnan..) !!!

நான் இதை சொல்லியே ஆகணும்.. நீ அவ்வளவு அழகு


இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்..


இவ்ளோ அழகைப் பாத்திருக்க மாட்டாங்க..


And I am in love with you...




ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே


சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே


இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்


எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே


வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா


இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன‌


ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன (இப்போழ்தே)


(முன் தினம் பார்த்தேனே..)



ஆ: காதலே.. சுவாசமே..



ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து


நிகர் செய்ய பொன்னை வைத்தால்


துலாபாரம் தோற்காதோ பேரழகே


பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை


முதல் காதல் சிந்தும் கண்ணை


அணைக்காமல் போவேனோ ஆருயிரே


ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி


புகை போல படாமல் பட்டு நகர்வேனடி


வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி



பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..


சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே


இத்தனை நாளாக


ஆ: oh my love


பெ: உன்னை நான் பாராமல்


ஆ: yes my love


பெ: எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே



பெ: கடல் நீலம் மங்கும் நேரம்


அலை வந்து தீண்டும் தூரம்


மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே


ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்


விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்


இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே


பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே


உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே


உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே


ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..

சங்கமம் ( மழைத்துளி மழைத்துளி... ) !!!



ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ


மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்


உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்


உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்


(மழைத்துளி மழைத்துளி..)


ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌


என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க‌


என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்


என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும்


(என் காலுக்கு சலங்கையிட்ட)


நீ உண்டு உண்டு என்றபோதும் அட இல்லை இல்லை என்றபோதும்


சபை ஆடிய பாதமய்யா அது நிக்காது ஒருபோதும்

(ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

(மழைத்துளி மழைத்துளி...)






ஆ: தண்ணியில மீனழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை


எனக்குள்ள நானழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல‌


என் கண்ணீ் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே


சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே


ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ


மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு


விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு


கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம்


நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்


கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்



(மழைத்துளி மழைத்துளி...)






(ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)


(எம். எஸ். விஸ்வநாதன்)


ஆ: தந்தான தந்தானனா..


மழைக்காகத் தான் மேகம் அட கலைக்காகத் தான் நீயும்


உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே வா


நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு


இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா


ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்


தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்


புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது


போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது


மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது


கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது






ஹரி: ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌


விஸ்: என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க‌


ஹரி: என் காலுக்குச் சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல்வணக்கம்


விஸ்: என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைகள் வெல்லும்வரைக்கும்


ஹரி: நீ உண்டு உண்டு என்ற போதும்


விஸ்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்


சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும்

சுப்பிரமணியபுரம் (கண்கள் இரண்டால்) !!!

ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்


என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்


சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்


என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்


(கண்கள் இரண்டால் உன்)



பெ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்


பின்பு பார்வை போதும் எனநான் நினைத்தே நகர்வேனே மாற்றி


கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்


ஒரு வண்ணக் கவிதை காதல் தானா


ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே


இதை இருளிலும் படித்திட முடிகிறதே



ஆ: இரவும் அல்லாத பகலும் அல்லாத‌


பொழுதுகள் உன்னோடு கழியுமா


தொடவும் கூடாத படவும் கூடாத‌


இடைவெளி அப்போது குறையுமா


பெ: மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே


மறுபுறம் நாணமும் தடுக்குதே


இதுவரை யாரிடமும் சொல்லாத கதை



ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்


என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்


சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்


என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்



பெ: கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத‌


மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்


உடலும் அல்லாத உருவம் கொள்ளாத‌


கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்


ஆ: உனையன்றி வேறொரு நினைவில்லை


இனி இந்த ஊனுயிர் எனதில்லை


தடையில்லை சாவிலுமே உன்னோடு வர‌



பெ: கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்


ஒரு வண்ணக் கவிதை காதல் தானா


ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே


இதை இருளிலும் படித்திட முடிகிறதே


ஆ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்


பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே


நகர்வேனே மாற்றி


பெ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்


என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென‌


ஆ: சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்


என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பரட்டை என்கிற அழகுசுந்தரம் !!!

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் உன் கருவில்


மகனாகும் வரம் வேண்டும் தாயே


என் கடவுள் என் உலகம் நீயே


என் கடவுள் என் உலகம் நீயே






(ஏழேழு ஜென்மம்..)




தாய் பேசிடும் ஓர் வார்த்தை நாம்


விழுந்தாலும் நமைத் தாங்கும் தூணல்லவா


தாய் வீசிடும் ஓர் பார்வை தான்


நம் காயங்கள் குணமாக்கும் மருந்தல்லவா


ஊர் கண்கள் பட்டால் விரல் முறித்து நெறிப்பாள்


வெயில் உன்னை சுட்டால் சூரியனை எரிப்பாள்


மழைக்காலம் வந்தாலுமே முந்தானை குடையாகுமே


(ஏழேழு ஜென்மம்..)


தேகம் இது தாய் தந்தது தாய்


இல்லாத நிமிடங்கள் நோய் தந்தது


தூரம் நம்மைப் பிரித்தாலுமே தாய்


நினைக்கின்ற நேரத்தில் புரை ஏறுது


தாய் அன்பில் தானே சுயநலங்கள் இல்லை


தாய் தொலைந்த வழியில் கால்தடங்கள் இல்லை


சொர்க்கங்கள் எங்குள்ளது தாய்மடியில் தானுள்ளது


(ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் ..)




No comments:

Post a Comment