ராம் ( விடிகின்ற பொழுது தெரிந்திடுமா ) !!!
ராம் ( நிழலினை நிஜமும் பிரிந்திடுமா ) !!!
பள்ளிக்கூடம் ( இந்த நிமிடம் ) !!!
தமிழ் எம்.ஏ ( பறவையே எங்கு இருக்கிறாய் ) !!!
இதோ இதோ இந்தப் பயணத்திலே
கருப்பசாமி குத்தகைதாரர் ( உப்புக்கல்லு தண்ணீருக்கு ) !!!
பெ: உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தச் சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
தப்பிச் சொல்லக் கூடாதுன்னு கேட்டுக்கிட்டது
தேதித் தாளைப் போலே வீணே நாளும் கிழியறேன்
நான் தேர்வுத் தாளை கண்ணீரால ஏனோ எழுதுறேன்
இது கனவா ஆஆஆஆ... இல்லை நிஜமா
தற்செயலா தாய் செயலா..
நானும் இங்கு நானும் இல்லையே (உப்புக்கல்லு)
பெ: ஏதும் இல்லை வண்ணம் என்று நானும் வாடினேன்
நீ ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாத்துன
தாயும் இல்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன்
நீ தேடி வந்து நெய்த அன்பால நின்று தாக்கினாய்
கத்தி இன்றி ரத்தம் இன்றிக் காய்ப்பட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மையடைகிறேன்
மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள்
உன் நிழல் கொடுத்த தைரியத்தால் உண்மையறிகிறேன்
உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது
ஒத்தச்சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
ஓ ஓ ஓ ஓஒ
பெ: மீசை வைத்த அன்னை போல உன்னைக் காண்கிறேன்
நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதமாகுதே
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன்
உன் பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே
கட்டிலுண்டு மெத்தை உண்டு ஆன போதிலும்
உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே
தென்றலுண்டு திங்களுண்டு ஆன போதிலும்
கண் நாளும் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே
(உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது)
பொறி ( பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் ) !!!
வாரணம் ஆயிரம் (Hai Malini .. I am Krishnan..) !!!
நான் இதை சொல்லியே ஆகணும்.. நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்..
இவ்ளோ அழகைப் பாத்திருக்க மாட்டாங்க..
And I am in love with you...
ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன (இப்போழ்தே)
(முன் தினம் பார்த்தேனே..)
ஆ: காதலே.. சுவாசமே..
ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே
பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி
பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக
ஆ: oh my love
பெ: உன்னை நான் பாராமல்
ஆ: yes my love
பெ: எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
பெ: கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே
ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே
ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..
சங்கமம் ( மழைத்துளி மழைத்துளி... ) !!!
ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி மழைத்துளி..)
ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும்
(என் காலுக்கு சலங்கையிட்ட)
நீ உண்டு உண்டு என்றபோதும் அட இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமய்யா அது நிக்காது ஒருபோதும்
(ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)
(மழைத்துளி மழைத்துளி...)
ஆ: தண்ணியில மீனழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை
எனக்குள்ள நானழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீ் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு
கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி மழைத்துளி...)
(ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)
(எம். எஸ். விஸ்வநாதன்)
ஆ: தந்தான தந்தானனா..
மழைக்காகத் தான் மேகம் அட கலைக்காகத் தான் நீயும்
உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே வா
நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது
மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது
ஹரி: ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
விஸ்: என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க
ஹரி: என் காலுக்குச் சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல்வணக்கம்
விஸ்: என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைகள் வெல்லும்வரைக்கும்
ஹரி: நீ உண்டு உண்டு என்ற போதும்
விஸ்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும்
சுப்பிரமணியபுரம் (கண்கள் இரண்டால்) !!!
ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
(கண்கள் இரண்டால் உன்)
பெ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் எனநான் நினைத்தே நகர்வேனே மாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆ: இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
பெ: மடியினில் சாய்ந்திடத் துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
ஆ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனச்
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
பெ: கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
ஆ: உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
பெ: கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
ஆ: பேச எண்ணி சிலநாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே
நகர்வேனே மாற்றி
பெ: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
ஆ: சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
பரட்டை என்கிற அழகுசுந்தரம் !!!
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் உன் கருவில்
மகனாகும் வரம் வேண்டும் தாயே
என் கடவுள் என் உலகம் நீயே
என் கடவுள் என் உலகம் நீயே
(ஏழேழு ஜென்மம்..)
தாய் பேசிடும் ஓர் வார்த்தை நாம்
விழுந்தாலும் நமைத் தாங்கும் தூணல்லவா
தாய் வீசிடும் ஓர் பார்வை தான்
நம் காயங்கள் குணமாக்கும் மருந்தல்லவா
ஊர் கண்கள் பட்டால் விரல் முறித்து நெறிப்பாள்
வெயில் உன்னை சுட்டால் சூரியனை எரிப்பாள்
மழைக்காலம் வந்தாலுமே முந்தானை குடையாகுமே
(ஏழேழு ஜென்மம்..)
தேகம் இது தாய் தந்தது தாய்
இல்லாத நிமிடங்கள் நோய் தந்தது
தூரம் நம்மைப் பிரித்தாலுமே தாய்
நினைக்கின்ற நேரத்தில் புரை ஏறுது
தாய் அன்பில் தானே சுயநலங்கள் இல்லை
தாய் தொலைந்த வழியில் கால்தடங்கள் இல்லை
சொர்க்கங்கள் எங்குள்ளது தாய்மடியில் தானுள்ளது
(ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் ..)
No comments:
Post a Comment